Sunday, November 25, 2012


பொறுமை தரும் பலம்!

எது நடந்தாலும் அதைப் பொறுத்துக் கொள்ளுங்கள். எதைக் குணப்படுத்த முடியாதோ  அதைப் பொறுத்தே ஆக வேண்டும்! மகிழ்ச்சியுடன் பொறுத்துக் கொள்ளுங்கள். காலை முதல் நடு இரவு வரை நூற்றுக்கணக்காந வசதிக் குறைவுகள், தொல்லைகள் மற்றும் துன்பங்களுடன் வாழ கற்றுக் கொள்ளுங்கள்..பொறுமை, உள்பலம் மற்றும் இச்சாசக்தி உங்களிடம் அதிகரிக்கும். 

ஒருவரது அடிப்படைத் தேவைகளுக்கு கூட  மற்றவரை அண்டி இருப்பது தான் ஒருவரது அமைதியை இழப்பதற்கான முக்கியமான காரணமாகும்!..'பராதீனம் ப்ராணசங்கடம்'. பிறரை அண்டி இருப்பது என்பது துன்பம் தருவது தான் .. எனவே தன காலில் நிற்க முயலுங்கள்! முடிந்த மட்டும் முயலுங்கள்!

மனப்பூர்வமாக முயன்றால் பல்வேறு துறைகளில் உங்களால் தன்  காலில் நிற்க முடியும்,என்பதை நீங்கள் கண்டுகொள்ளுவீர்கள்.. உங்கள் உடைகளை நீங்களே துவைத்துக் கொள்ளுங்கள்..உங்கள் அறையை  நீங்களே  சுத்தம் செய் து கொள்ளுங்கள்.. உங்கள் உணவை நீங்களே சமைத்துக் கொள்ளுங்கள்.. உங்கள் கடிதங்களை நீங்களே டைப் அடித்து கொள்ளுங்கள்.. இவற்றை நீங்கள் தினமும் செய்து தான் ஆகவேண்டும் என்பதில்லை.. தீராது என்ற நிலையில் இந்த  திறமைகள் உங்களுக்கு பெரும் உதவியாக அமையும்!